தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 23 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 34,54,890-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிக்க- தலாய் லாமா: ஆஸ்திரேலியா பிரதமருக்கு வாழ்த்துக் கடிதம்
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,537-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 13,670 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 321 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.