திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 59 ஆவது கோடை விழா இன்று தொடங்கியது. இன்று தொடங்கியிருக்கும் இந்த கோடை விழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறவிருக்கிறது.
59ஆவது கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சாா்பில் இன்று தொடங்கிய மலர் கண்காட்சி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க.. சுதந்திரமடைந்து முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பு
அதேபோல் சுற்றுலாத் துறை சாா்பில் இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது. இதனையொட்டி பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், படகு அலங்காரப் போட்டி, மீன்பிடித்தல் போட்டி, பாரம்பரிய வீர விளையாட்டுப் போட்டிகள், நாய்கள் கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன.
கோடை விழாவில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவது வழக்கம்.