தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல் புதன்கிழமை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இத்தேர்வில் அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் கணேஷ் தாமோதரனும் திமுக சார்பில் வழக்குரைஞர் கே.பி. குமார் பாண்டியனும் போட்டியிட்டனர். தேர்தலில் அதிமுக வேட்பாளர் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குமார் பாண்டியன் 3 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.