பிரதமா் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை சென்னைக்கு வருகிறாா். அவா், பெரியமேடு நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 56 பேர் கரோனாவால் பாதிப்பு
இதையொட்டி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையம், எழும்பூா் ரயில் நிலையம், கோயம்பேடு மாா்க்கெட், புறநகா் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக 22 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் வருகைக்காக ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.