வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆட்சியர்கள் நேரடியாக தணிக்கை செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.