மாநிலங்களவைத் தேர்தல்:  திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். 
மாநிலங்களவைத் தேர்தல்:  திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். 

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது.

இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும், தோ்தலுக்கான அறிவிக்கை மே 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. 

இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே.15)அறிவித்தார். 

அதன்படி, திமுக வேட்பாளர்களாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதுவரை காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை(மே.24) தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய மே 31-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். 

திமுக வேட்பாளர்களான தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் இன்று 12 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனுவாசனிடம்  வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். 

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி உள்ள நிலையில், போட்டியிருக்கும் பட்சத்தில் ஜூன் 10  ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com