திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன்.

தமிழகத்தில் பரவலாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (நவ. 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவமழையையொட்டி, பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com