3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் 'டிலைட்' எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மி.லி. பாக்கெட்டுகளில் தயார் செய்யப்படுகிறது.
குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 மி.லி. பாக்கெட்டின் சில்லறை விலை ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் மக்களுக்குப் பால் பவுடர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆவின் டிலைட் பால் பாக்கெட் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பழையாறை - கிராமமாக மாறிய தலைநகரம்!
500 மி.லி. ஆவின் டிலைட் பாலில் 3.5% கொழப்பு, 0% பாக்டீரியா உள்ளது. பயணம் செய்வோருக்கு பயன்படும் வகையில் உள்ளது.