மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை மாலை வினாடிக்கு 21,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 26,000 கன அடியாக அதிகரித்தது. வியாழக்கிழமை காலை நீர்வரத்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21,500 கன அடி வீதமும், வெள்ள நீர் வினாடிக்கு 4,500 கன அடி வீதம் உபரிநீர் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை காலை 23 ஆவது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com