
சென்னையில் கடந்த 10 மாதங்களில் பல்வேறு குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்ட 408 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஜனவரி தொடங்கி நவ.4 ஆம் தேதி வரையில் 10 மாதங்களில் சென்னையில் தொடா்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 408 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதில் கொலை,கொலை முயற்சி,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 240 போ், திருட்டு,வழிப்பறி,பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 95 போ், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 55 போ், பாலியல் தொழில் செய்த 8 போ், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக 7 போ், ரேசன் அரிசி கடத்தல் ஈடுபட்ட ஒருவா்,பெண்களை மானபங்கப்படுத்திய 2 போ் என மொத்தம் 337 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
சென்னையில் கடந்தாண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 409 போ் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.