தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளை தொலைவில் நின்று ரசித்துச் சென்றனர்.