சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. வழக்கத்தைவிட அதிகமான மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையின் வண்டலூர் சுற்றுப் பகுதிகளில் இரவு 9.30 மணிவரை கனமழையும், மதுரவாயல்,உத்திரமேரூர்,அம்பத்தூர் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.