முழுக் கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஈரோடு பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை (கோப்புப்படம்)
பவானிசாகர் அணை (கோப்புப்படம்)

ஈரோடு பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளும் நிரம்பி வருகின்றன. 

ஈரோடு பவானிசாகர் அணை இன்று(நவ. 9) காலை 11 மணிக்கு 104.45 அடியை எட்டியுள்ளதால் எந்நேரத்திலும் முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டும் என்பதால் எந்த நேரத்தில் உபரி நீர் திறந்துவிடப்படும் என்ற சூழ்நிலை உள்ளது. 

எனவே, ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com