கோயிலில் டி-சர்ட், லெக்கிங்ஸ் அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
கோயில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல; கோயிலுக்கு வருவோர் நாகரிகமான உடைகளை அணிந்து வரவேண்டும். டி-சர்ட், லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியவில்லை.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலை உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் வாசலில் புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் சாமி சிலை முன் சுயபடம் (செல்ஃபி) எடுக்கின்றனர். கோயில் அர்ச்சர்களே புகைப்படம் எடுத்து தங்களின் தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகின்றனர் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: காலநிலை மாற்ற மாநாட்டில் கவனம் பெற்ற பாகிஸ்தான் வெள்ளம்
இந்நிலையில், டி-சர்ட், லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியவில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.