32-வது நாளாக முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 15,200 கன அடியாக உள்ளது. 
32-வது நாளாக முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 15,200 கன அடியாக உள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் நேற்று மாலை வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது.

இன்று காலை வினாடிக்கு 15,200 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 750 கன அடியிலிருந்து வினாடிக்கு 200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகஉள்ளது. மழையளவு 23.80 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com