தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளுக்கு நாளை மட்டும் (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.