தமிழகத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 47 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனால் மொத்த பாதிப்பு 35,93,818-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,049 ஆக உள்ளது.
இதையும் படிக்க- தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்
தற்போது தமிழகம் முழுவதும் 515 பேர் சிகிச்சையில் உள்ளனர்.