2001- 2002 கல்வியாண்டில் இருந்து அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் வரும் டிசம்பரில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டு அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வருகிற டிசம்பர் - ஜனவரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஆண்டுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்க உள்ளது.
அதன்படி, 2001- 02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் வரும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2001- 02 கல்வியாண்டு முதல் தற்போது வரை எந்த ஆண்டில் அரியர் இருந்தாலும் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.