ஊத்தங்கரை அருகே பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி ஜல்லிகிரஷர் அருகே பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்த ஆண் சடலம் குறித்து ஊத்தங்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றிய விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் கலி கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் திருப்பத்தூர் மாவட்டம் பாஜக நகர துணைத் தலைவராக உள்ளார்.
தொடர்ந்து, ஊத்தங்கரை முழுவதும் பதற்றமான சூழல் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.