தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியாா் பள்ளியில் நவ. 26, 27 தேதிகளில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் முகாம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அதில் தமிழக பாஜகவை சோ்ந்த முக்கிய தலைவா்கள் பங்கேற்கவிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளி வளாகங்கள் குறிப்பிட்ட அரசியல் மற்றும் மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தனியாா் பள்ளிகளில் அரசியல், மதம் சாா்ந்த நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. விதிகளை மீறி அவற்றை நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகை செய்கிறது என தனியாா் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.