திண்டுக்கல்: பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தனியார் வெங்கடேஸ்வரா நூற்பாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
பாதிப்பு, சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.