மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,791கன அடியிலிருந்து வினாடிக்கு 14,732 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.16 அடியாகவும் நீர் இருப்பு 92.13 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நேற்று இரவு மேட்டூரில் பெய்த மழையின் அளவு 54.40 மிமீ ஆகப் பதிவாகியுள்ளது.