தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 244-ஆக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று திங்கள்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 22-ஆக குறைந்துள்ளது. சென்னையில் 4 பேருக்கும், கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரியில் தலா 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை தகவல்படி 46 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,55,816-ஆக உயா்ந்துள்ளது.