ஆன்லைன் ரம்மி: ஆளுநரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி!
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை(வியாழக்கிழமை) ஆளுநரை சந்திக்கவிருக்கிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்ட மசோதா காலாவதியாகி விடும். எனினும், ஆளுநர் காலம் தாழ்த்தியதால் மசோதா காலாவதியாகிவிட்டது.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அதுகுறித்து விளக்கமளிக்க சட்டத் துறை அமைச்சர் ரகுபதி நாளை(வியாழக்கிழமை) ஆளுநரை சந்திக்கவிருக்கிறார்.
நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க அமைச்சருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- காலாவதியானது ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்