மதுரை கள்ளழகர் கோயிலில் மின் கசிவு காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோயிலில் சாமி படங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பற்றியது.
இதனையடுத்து, பக்தர்கள் அனைவரும் துரிதமாக கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கோயிலில் பற்றியுள்ள தீயிணை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.