தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
ஞாயிற்றுக்கிழமை நிரப்படி, அதிகபட்சமாக சென்னையில் 101 பேருக்கும், செங்கல்பட்டில் 44 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஆண்கள் 284 பேர், பெண்கள் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,415-ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 540 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,40,640-ஆக அதிகரித்துள்ளது.