வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூா், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூா், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூா் மற்றும் விருதுநகா் ஆகிய 17 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும் அரியலூா், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூா், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், பெரம்பலூா், தஞ்சாவூா், நீலகிரி, திருச்சி, திருவாரூா், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூா் மற்றும் திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.