தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி, சிபிசிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு ஐ.ஜி.யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணைக்குழு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை ஐ.ஜி.யாக இருந்த கண்ணன், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தாமஸ் மவுண்ட் துனை ஆணையராக தீபக் சிவஜும்,  சென்னை போக்குவரத்து இணை ஆணையராக சமய சிங் மீனாவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com