தமிழக காவல்துறையில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் வட மண்டல ஐஜியாக என்.கண்ணன் நியமிக்கப்பட்டாா்.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
பி.சி.தேன்மொழி-சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐஜி (தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி)
என்.கண்ணன்-தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி (சென்னை ஆயுதப்படை ஐஜி)
ஏ.பிரதீப்-செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை துணை ஆணையா்)
தீபக் ஸிவாச்-சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை துணை ஆணையா் (ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐந்தாவது அணி கமாண்டன்ட்)
சமய் சிங் மீனா-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப்பிரிவு கிழக்கு துணை ஆணையா் (உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 10-ஆவது அணி கமாண்டன்ட்)
டி.குமாா்-ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐந்தாவது அணி கமாண்டன்ட் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.