ஓட்டுநர், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர்களில் சிலர் மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் வந்ததையொட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றம் என்றும் ஓட்டுநர், நடத்துனர்களில் சிலர் மது அருந்திய நிலையில் பணிபுரிவது கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்றும் கூறியதுடன்,
பணியின்போது மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் மேலும் அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.