தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வு தொடக்கம்!

தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். 
தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வு தொடக்கம்!

தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். 

தொடங்கிவைத்து அவர் கூறியதாவது, 

பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து அடுத்த 5 நாள்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

இந்தாண்டு 2,040 பி.எட் படிப்பு இடங்களுக்கு 5,138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 

தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள், 14 உதவிபெறும் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகளில் 2,040 பி.எட் படிக்கான இடங்கள் உள்ளதாக அவர் கூறினார். 

மேலும், 2023 முதல் பி.எட் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

நவம்பர் 1-இல் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com