தமிழகத்தில் மேலும் 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 292 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 72 போ், செங்கல்பட்டில் 24 போ், கோவையில் 18 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனால் மொத்த பாதிப்பு 35,88,449-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,048ஆக
உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,46,178-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,223 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.