மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,20,000 கனஅடி நீர் வர வாய்ப்புள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கனஅடியிலிருந்து 1,20,000 கனஅடி நீர் வர வாய்ப்புள்ளது.
காவிரி கரையோரம் உள்ள கிருஷ்னகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு. நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
9 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் அறிவுறுத்தியுள்ளது.