இந்துக்களை அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை பெரியார் திடலில் கடந்த செப்.6ஆம் தேதி தி.க.தலைவர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் இந்துக்களை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஆ.ராசாவின் பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.