6 மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து காவல் துறை

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்கள் மூலம் கடந்த ஆறு மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து காவல் துறை

    
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்கள் மூலம் கடந்த ஆறு மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதன் மூலம் இந்த 6 மாதங்களில் 3,85,068 வழக்குகளுக்கு அபராதம் செலுத்தப்பட்டு மொத்தம் ரூ.6,01,45,160 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகன ஓட்டுநர்களுக்கு  தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், மொத்தம் 6,108 வழக்குகளில் ரூ.6,07,66,000 அபராதமாக விதி மீறல்களுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால் 3,86,886 பழைய வழக்குகளுக்கு ரூ.7,65,35,160 அபராதமாகவும், புதிதாக பதிவான 5,31,687 வழக்குகளில் ரூ.15,59,75,421 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் கடந்த 6 மாதங்களில் மொத்தம் 9,18,573 வழக்குகளில் ரூ.23,25,10,581 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com