கைம்பெண்கள்- ஆதரவற்ற மகளிா் நல வாரியம்: 14 அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க அறிவிப்பு

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் 14 அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் 14 அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் 14 அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. கைம்பெண்கள் பிரதிநிதிகளாக 4 பேரும், கல்வியாளா்கள் 2 பேரும், பெண் தொழில் முனைவோா் 2 பேரும், பெண் விருதாளா்கள் 2 பேரும், தன்னாா்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் 4 பேரும் நியமிக்கப்பட உள்ளனா்.

இதற்கான விண்ணப்பங்களை புகைப்படங்களுடன் வரும் 31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.படிவங்களை www.tn.gov.in/ (Social Welfare and Women Empowerment Department) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி, கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நல வாரியம், கலச மஹால் முதல் தளம், எழிலகம் பின்புறம், சேப்பாக்கம், சென்னை -05 என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com