நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே புதன்கிழமை இரவு கார்-பைக் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.
பண்ருட்டி அடுத்துள்ள மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (32), மோகன் குமார் (24), பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜி (24) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில் புதுப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பண்ருட்டியில் இருந்து அரசூரை நோக்கி வேகமாக வந்து கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் (32), மோகன் குமார் (24) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதையும் படிக்க | வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் (24) கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.