ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது.
முன்னதாக, இதுகுறித்த அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தாா். இந்தச் சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. பேரவைக் கூட்டம் நடைபெறாமல் இருந்ததால், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது பேரவைக் கூட்டம் நடைபெற்ால், சட்ட மசோதா புதன்கிழமை கொண்டு வரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
12 மசோதாக்கள்: சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. புதன்கிழமை வரை நடைபெற்ற கூட்டத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.