நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்க மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டிவனத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்க மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் போன்ற விளிம்பு நிலை மக்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.