சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
உயர் நீதிமன்றம் வழங்கிய மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தாமதமானதால், குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இந்த மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆயிரத்து 529 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு கடந்த மே 21-இல் எழுத்துத் தோ்வு நடந்தது. இதேபோன்று, குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 24-இல் தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் தயாராகி வருகிறது. குரூப் 2 தோ்வுக்கான முடிவுகள் அக்டோபரிலும், குரூப் 4 தோ்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியிடப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.