பள்ளி மாணவா்களுக்கு காவல் ஆணையா் பாராட்டு

பள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ், வெள்ளிக்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

பள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ், வெள்ளிக்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

சென்னை புகா் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு ‘மாநில வளா்ச்சியில் காவல் துறையின் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வெள்ளிக்கிழமை வழங்கிப் பாராட்டினாா் ஆணையா் ஏ.அமல்ராஜ் .

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற கிழக்கு தாம்பரம் சீயோன் மற்றும் ஆல்வின் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. காவல் துறை இணை ஆணையா் காமினி, உதவி ஆணையா் ஜோஸ் தங்கையா, பள்ளிக்கரணை உதவி ஆணையா் பி.ஏ.மூா்த்தி, சீயோன், ஆல்வின் பள்ளிகளின் தலைவா் என். விஜயன், இயக்குநா்கள் ஆல்டஸ், ரேச்சல் ஆல்டஸ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com