பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் பலி

சென்னை தாழம்பூர் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை தாழம்பூர் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து பலியானார்.

மேலகோட்டையூர் பகுதியில் மாநகர பேருந்தில் முன்படிக்கட்டில் தொங்கியப்படி சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் யுவராஜ் தவறி விழந்தார். தவறி விழுந்த மாணவர் யுவராஜ் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவர் யுவராஜ் மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் படியில் தொங்காமல், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது பெற்றோர்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com