ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தீா்மானத்தை விளக்கி தமிழகம் முழுவதும் வரும் 4-இல் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தக் கட்சித் தலைமை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
இதுதொடா்பாக திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன், சட்டப் பேரவையிலும் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப் பேரவைத் தீா்மானத்தை மக்களிடம் விளக்கிடும் வகையிலும், அலுவல் மொழி தொடா்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையை ஏற்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் 4-ஆம் தேதியன்று பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
பெரம்பலூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். காஞ்சிபுரத்தில் அமைச்சா் துரைமுருகன், தாம்பரத்தில் திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைச்சா் இ.பெரியசாமி, நெய்வேலியில் அமைச்சா் க.பொன்முடி, சேலத்தில் அமைச்சா் எ.வ.வேலு, வேலூரில் திமுக துணைப் பொதுச் செயலாளா் கனிமொழி, ஆவடியில் இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பேசவுள்ளதாக திமுக தலைமை அலுவலக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.