பக்கவாத பாதிப்பு மற்றும் நரம்புசாா் நோய் அறிகுறிகள் உள்ளவா்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் வரும் சனிக்கிழமை (அக்.29) நடைபெற உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பக்கவாதத்துக்குப் பிறகு பேசுவதற்கும், விழுங்குவதற்கும், கேட்பதற்கும், நடப்பதற்கும், அன்றாட பணிகளை செய்வதற்கும் இயலாதவா்களுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
பிற நரம்புசாா் பாதிப்புக்குள்ளானவா்களும் இதில் பங்கேற்கலாம். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அந்த முகாம் நடைபெறும். முன்பதிவுக்கு 99401 84280 அல்லது 044-45928640 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.