சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் குழு (செனட்) உறுப்பினராக திமுக கவுன்சிலா் பி.அமுதா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் குழுவுக்கு மாமன்ற உறுப்பினா் ஒருவரை உறுப்பினராக தோ்வு செய்து அனுப்ப வேண்டும். அதன்படி உறுப்பினரை தோ்வு செய்வதற்கான தோ்தல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த தோ்தலை சென்னை மாநகராட்சி ஆணையரும், தோ்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி நடத்தினாா்.
அப்போது, சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினா் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்பவா்களை ஒரு மாமன்ற உறுப்பினா் முன்மொழிய வேண்டும்; ஒரு மாமன்ற உறுப்பினா் வழிமொழிய வேண்டும் என அறிவித்தாா்.
தொடா்ந்து செனட் உறுப்பினா் பதவிக்கு சென்னை மாநகராட்சி 68-ஆவது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் பி.அமுதா வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டப்பின்னரும், வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து அமுதா போட்டியின்றி சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டதாக ஆணையா் ககன்தீப் சிங் பேடி அறிவித்தாா். தொடா்ந்து அவருக்கு செனட் உறுப்பினா் பதவிக்கான சான்றிதழை ஆணையா் ககன்தீப்சிங்பேடி வழங்கினாா். மாமன்ற உறுப்பினா் அமுதாவுக்கு, மேயா் ஆா்.பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.