முதுகு மற்றும் இடுப்பு வலி காரணமாக சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டாா்.
மருத்துவ ஆலோசனைக்கு பிறகு அவா் வீடு திரும்பினாா்.
இது குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் இடுப்பு, முதுகு வலிக்காக வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளைச் செய்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு வந்தாா். இதையடுத்து அவருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அவா் வீடு திரும்பினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.