மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து மூன்றாவது நாளாக 18,000 கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 18,000 கன அடியாக சரிந்தது.
இன்று(சனிக்கிழமை) காலை 18-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3-வது நாளாக வினாடிக்கு 18,000 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.