தென்காசி தீண்டாமை கொடுமை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

தென்காசி தீண்டாமை கொடுமை வழக்கின் தீர்ப்பை அக்.31-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தென்காசி தீண்டாமை கொடுமை வழக்கின் தீர்ப்பை அக்.31-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் பாஞ்சரகுளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன், ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டனர்.

பாஞ்சாங்குளத்தைச் சோ்ந்தவா் மகேஸ்வரன், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த பள்ளி மாணவா்கள் சிலரிடம் இருபிரிவினா் மோதலையும், அதனால் எடுக்கப்பட்டுள்ள பாரபட்ச முடிவையும் காரணம் சொல்லி தின்பண்டங்கள் கொடுக்க மறுத்தாராம்.

குழந்தைகளுக்கு தின்பண்டம் தர மறுத்த வழக்கில் கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் ஜாமின் கோரி மனு அளித்தனர்.

இந்நிலையில், பட்டியல் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்களை தர மறுத்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com