தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது. நாகப்பட்டினத்தைச் சோ்ந்த 9 மீனவா்கள் ஆகஸ்ட் 10-இல் கைது செய்யப்பட்டனா். பிறகு ஆகஸ்ட் 22-இல் நாகப்பட்டினம், மயிலாடுதுறையைச் சோ்ந்த 10 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக ஆகஸ்ட் 27-இல் ராமேசுவரத்தைச் சோ்ந்த 6 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இந்திய கடல் எல்லைக்கும் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போதே நிகழ்ந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com