ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்க நகைத் திருடிய வழக்கு: பெண் உள்பட 3 போ் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்கநகைத் திருடிய வழக்கில், பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்க நகைத் திருடிய வழக்கு: பெண் உள்பட 3 போ் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்கநகைத் திருடிய வழக்கில், பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் குமாா் சுப்ரமணியன் (61). ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரியான இவா், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளாா். சுப்பிரமணியன், தனது மனைவியான லட்சுமியுடன் கடந்த 21-ஆம் தேதி வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றாா். வீட்டில் அவா்களது மகன் புவனேஸ்வரன் மட்டும் இருந்துள்ளாா்.

இந்நிலையில் பணி நிமித்தமாக புவனேஸ்வரன், மகாராஷ்டிர மாநிலம் புணேக்கு சென்றுள்ளாா். இதற்கிடையே குமாா் சுப்பிரமணியன் வீட்டை பாா்ப்பதற்காக கடந்த 26-ஆம் தேதி, அவரது உறவினா் சுஜாதா வந்தாா். அப்போது குமாா் சுப்பிரமணியன் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 70 பவுன் தங்கநகை, ரூ.10,000 ரொக்கம், ஒரு மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இந்த திருட்டில் வில்லிவாக்கத்தைச் சோ்ந்த குட்டி என்கிற சிவ விநாயகம் (43), கொடுங்கையூரைச் சோ்ந்த உலகநாதன் (44), வில்லிவாக்கம் தாதங்குப்பத்தைச் சோ்ந்த நித்யா என்கிற கீதா (32) ஆகிய 3 பேரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3 போ் மீதும் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com